மெட்ரோ ரயில் திட்டப் பணி பூந்தமல்லி பைபாஸ் சாலையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்: செப்.1ம் தேதி முதல் 15ம் தேதி வரை அமல்...!!

மெட்ரோ ரயில் திட்டப் பணி பூந்தமல்லி பைபாஸ் சாலையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்: செப்.1ம் தேதி முதல் 15ம் தேதி வரை அமல்...!!
By: TeamParivu Posted On: July 29, 2022 View: 101

மெட்ரோ ரயில் திட்ட பணி காரணமாக பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி வரை வரும் 1ம் தேதி முதல் செப்.15ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுகிறது.

இதுகுறித்து ஆவடி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் தற்காலிகமாக வரும் 1ம் தேதி முதல் செப்.15ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் பக்கமிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பூந்தமல்லிக்கு முன்பாக சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி செல்லும் வாகனங்கள், வழக்கமாக சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோடில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் மட்டும் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல், மெயின் ரோடிலேயே அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தாண்டிச் சென்று 2 வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடதுபுறமாக செல்ல வேண்டும்.

* சென்னை வெளிவட்ட சாலையில் வண்டலூர் பக்கமிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி - நசரத்பேட்டை அருகே இடதுபுறம் திரும்பி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்கின்றன. அந்த வாகனங்கள் பூந்தமல்லி - நசரத்பேட்டை அருகில் சென்னை வெளிவட்ட சாலை பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பாமல், சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடிக்கு முன்பு ‘யூ’ டர்னில் திரும்பி சென்னை வெளிவட்ட சாலையிலேயே பூந்தமல்லி - பைபாஸ் பகுதி வரை வந்து பின்னர் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையினை அடைந்து தாங்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.

பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது:

* பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையர் ஆவடி போக்குவரத்து இணையதள முகவரியான dcpavadi.traffice@gmail.com அனுப்பலாம்.

* அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையரின் செல்போன் எண்ணிலும் 8056217958 தொடர்பு கொள்ளலாம்.

* பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை டிவிட்டர் twitter.com avadipolice மூலம் காவல் ஆணையரகத்திற்கு பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Tags:
#மெட்ரோ ரயில்  # திட்டப் பணி  # பூந்தமல்லி பைபாஸ்  # போக்குவரத்து 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..