சாஸ்திரா பல்கலைக்கழகம் நீர்நிலையில் அமைந்துள்ளது என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சாஸ்திரா பல்கலைக்கழகம் நீர்நிலையில் அமைந்துள்ளது என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு..!
By: TeamParivu Posted On: August 08, 2022 View: 57

சாஸ்திரா கல்வி நிறுவனம் நீர் நிலையில் உள்ள கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை  சாஸ்திராக்கு பொருந்தாது என தமிழக அரசு உயர்நிதிமன்றத்தில் தெரிவித்துருக்கிறது. இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருகின்றன. வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டடம் உயர் நீதிமன்றத்தின் கட்டுபாட்டில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சாஸ்திரா கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சாஸ்திரா பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அமைந்து வரும் 31 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கீட வேண்டும் என்றும் அதற்கான தொகையை செலுத்த தயாராக இருப்பதும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 4 வாரங்களுக்குள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என தஞ்சாவூர் வட்டாட்சியரும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த உத்தரவின் பேரில் சாஸ்திரா பல்கலைக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது இன்று தலைமை நீதிபதி விசாரணைக்கு வந்த போது சாஸ்திரா கல்வி நிறுவனம் தரப்பில் அரசு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்றி கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்க தயாரக இருப்பதாகவும் அதற்கு அனுமதி கோரி அரசுக்கு விண்ணப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மேற்கொண்டு நடத்த ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசை பொறுத்த வரைக்கும் இந்த வழக்கில் ஆக்கிரமிப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படாமல் பல்கலை கழக நிர்வாகிகள் தரப்பில் தடுத்து வருவதாகவும் சீல் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் பிறப் பகுதிகள் சிறு சிறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் முதலில் சாஸ்திரா பல்கலை பகுதிகளை மீட்டு எடுங்கள் என்று பொதுமக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ளதால் மாற்று இடத்திற்கு அரசாணை சாஸ்திரா பல்கலை கழகத்துக்கு பொருந்தாது என்ற விளக்கமும் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால் அரசாணை பொருந்தாது என்று அரசு தெரிவித்து வந்தது.

அதுவரை இந்த நடவடிக்கையால் அங்கு தங்கியுள்ள மற்றும் படிகின்ற மாணவிகளுக்கு கல்வியில் எந்தவோரு வகையில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த வழக்கு விசாரணையை முடிக்கும் வரைக்கும் சாஸ்திரா பல்கலை கழக கட்டிடங்கள் சென்னை உயர்நீதிமன்ற கட்டுபாட்டில் இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 24 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:
#சாஸ்திரா பல்கலைக்கழகம்  # ஆவணங்கள்  # மாற்று இடம்  # உயர்நீதிமன்றம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..