குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: தமிழக கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: தமிழக கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
By: TeamParivu Posted On: August 21, 2022 View: 83

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து வெளியாகும் லான்செட் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் இதன் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளாக கடும் காய்ச்சல் மற்றும் உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும் இதன் பாதிப்பு உள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும், நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags:
#தக்காளி காய்ச்சல்  # அமைச்சர் மா.சுப்பிரமணியன்  # கேரளா 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..