அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 6 தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்..!!

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 6 தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்..!!
By: TeamParivu Posted On: September 04, 2022 View: 86

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 6 தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும்,  25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களைவிடுதலை செய்ய வேண்டும்.

விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருந்தது. இத்தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, எஞ்சிய நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 தமிழர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதனை தள்ளிப்போட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

Tags:
#தமிழக அரசு  # அண்ணா பிறந்தநாள்  # விடுதலை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..