சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி கட்டடங்களை பராமரிக்க ரூ.315 கோடி நிதி ஒதுக்கி புதுப்பிக்கும் பணிகளும் தொடங்கின.
சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்கள் 315 கோடி செலவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் எஸ்.கே.கவுல், இந்திரா பானர்ஜி மற்றும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:
#நீதிமன்றம் கட்டும் பணி
# அடிக்கல்
# முதல்வர் மு.க.ஸ்டாலின்