தந்தை பெரியார் விருதுக்கு 31க்குள் விண்ணப்பிக்கவும்: காஞ்சி கலெக்டர் தகவல்..!!

தந்தை பெரியார் விருதுக்கு 31க்குள் விண்ணப்பிக்கவும்: காஞ்சி கலெக்டர் தகவல்..!!
By: TeamParivu Posted On: September 04, 2022 View: 99

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: 

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ம் ஆண்டு முதல்  வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுவார். அந்தவகையில், இந்தாண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணி மற்றும் இதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக விண்ணப்பம் இருக்கவேண்டும். விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31.10.2022. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:
#தந்தை பெரியார் விருது  # காஞ்சிபுரம்  # கலெக்டர் ஆர்த்தி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..