தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும் என்றும் அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இல்லை என்றும் தமிழ்நாட்டில் 1044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்றும் பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
முகக்கவசம், தனிமனித இடைவெளி கிருமிநாசினி பயன்பாட்டை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார்.
Tags:
#கொரோனா தடுப்பூசி
# பள்ளி
# அமைச்சர் மா.சுப்பிரமணியன்