குடிநீர், கழிவுநீரகற்று வரியை 30ம்தேதிக்குள் செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

குடிநீர், கழிவுநீரகற்று வரியை 30ம்தேதிக்குள் செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: September 21, 2022 View: 88

குடிநீர், கழிவுநீரகற்று வாரியை வரும் 30ம்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு வசதியாக வசூல் மையங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் கடைசி நாளான செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறது.

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும்.

மேலும், நுகர்வோர் தங்களது நிலுவைத் தொகையை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ,https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம். எனவே, நுகர்வோர் வரும் 30ம்தேதிக்குள் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:
#குடிநீர்  # கழிவுநீரகற்று  # வரி  # நுகர்வோர்  # குடிநீர் வாரியம்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..