புதுவையில் கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி:
புதுச்சேரியில் தமிழ்வழியில் மருத்துவ படிப்பை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். முதல்வரோடு ஆலோசனை செய்து குழு அமைக்கப்பட்டு முதல் முயற்சியாக புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவ படிப்பு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஒரு குழு அமைக்கப்பட்டு 6 மாதத்துக்குள் மருத்துவகல்வி புத்தகங்கள் தமிழில் தயாரிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் எந்த மொழியையும் திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தொழிற்கல்வியைக்கூட தாய்மொழியில் படிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார்கள். தாய் மொழியில் படிக்கும்போது புரிதல் அதிகமாக இருக்கும் என்றார்.
Tags:
#புதுச்சேரி
# தமிழ்வழியில் மருத்துவ படிப்பு
# தமிழிசை