டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால், ரூ.200 அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.
பட்டாசுகளை தயாரித்தல், விற்றால், ரூ.5,000 வரை அபராதம்- 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் பட்டாசு தடையை செயல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுவை கட்டுப்படுத்திடும் விதமாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அஃதொப்பர் மாதத்தில் அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால் மற்ற மாநிலங்களை காட்டிலும் காற்று மாசு டெல்லியில் அதிக அளவில் இருக்கும். அதே காலகட்டத்தில் தீபாவளி பண்டிகை வருவதால் பட்டாசு காண ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல இந்த ஆண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக பட்டாசுகள் விற்கப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு, பட்டாசுகளை பறிமுதல் செய்தும் டெல்லி போலீஸ் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
தற்போது அம்மாநில சுற்றுசூழல் அமைச்சர் கோபால் ராய் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன் படி:
தனிநபர் ஒருவர் கடையில் பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ அவருக்கு ரூ.200 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர சட்ட விரோதமாக பட்டாசுகள் குடோன்களில் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ அந்த நபருக்கு ரூ.5,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்காணிப்பதற்காக 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
Tags:
#டெல்லி
# சுற்றுச்சூழல் அமைச்சர்
# பட்டாசு