சென்னையில் இருந்து காரில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி திண்டிவனம் வந்து கொண்டிருந்தார்.
திண்டிவனம் அருகே, ஒலக்கூர், பாதிரி என்ற இடத்தில் கார் சென்றபோது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் அடித்ததில், அதன் மீது மோதியது. உடனே பின்னால் பாதுகாப்புக்காக வந்த கார் சவுமியா அன்புமணி சென்ற கார் மீது அதிவேகமாக மோதியது.
மேலும் அதன் பின்னால் அடுத்தடுத்து 2 கார்கள் மோதியது. பின்னர் அருகே உள்ள அவர்களுக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து மாற்று கார் வரவழைக்கப்பட்டு, சவுமியா அன்புமணி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனிடையே அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் விபத்துக்குள்ளான 5 கார்களையும் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
Tags:
#திண்டிவனம்
# அன்புமணி